ஆறு வாரங்களுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் (JNVs) அமைப்பதற்கான நிலத்தை அடையாளம் காணுமாறு உச்ச நீதிமன்றம் (SC) தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
மாநிலத்தில் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான எட்டு ஆண்டுகாலத் தடையை நீதிமன்றம் மாற்றியமைத்தது.
மத்திய அரசும் மாநில அரசும் பரஸ்பர ஆலோசனைகளை நடத்தி அறிக்கையினைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கோரியது.
நிலத்தை அடையாளம் காண்பது என்பது பள்ளிகளின் கட்டுமானத்தைத் தொடங்கச் செய்வதைக் குறிக்காது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
நிலத்தை அடையாளம் காண்பது என்பது நிலுவையில் உள்ள கல்வித் திட்ட நிலுவைகள் உட்பட, மத்திய அரசிடம் தனது குறைகளை எழுப்ப என்று மாநிலத்திற்கு சுதந்திரம் வழங்கப் பட்டது.