நாசாவின் விண்வெளித் திட்டத்தினை நிறைவு செய்த முதல் இந்தியர்
June 28 , 2025 423 days 589 0
ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜஹ்னவி டாங்கெட்டி, நாசாவின் சர்வதேச வான்வெளி மற்றும் விண்வெளித் திட்டத்தை நிறைவு செய்த முதல் இந்தியர் ஆவார்.
2029 ஆம் ஆண்டில் டைட்டன்ஸ் விண்வெளிப் பயணத்தில் பயணிக்க உள்ள முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற பெருமையினை அவர் பெற உள்ளார்.
இவர் ஏற்கனவே, நாசாவின் Space Apps Challenge என்ற போட்டியில் பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது மற்றும் இஸ்ரோ உலக விண்வெளி வார இளம் சாதனையாளர் விருது வழங்கி ஜஹ்னவி கௌரவிக்கப் பட்டுள்ளார்.