நாடு முழுவதும் கைவிடப்பட்ட விமான தளங்களை புதுப்பித்தல்
January 29 , 2019 2709 days 909 0
விமான இணைப்புகளை வலுப்படுத்துவதற்காக நாடெங்கிலும் உள்ள 400 கைவிடப்பட்ட விமான தளங்களைப் புதுப்பிக்கவும் மேம்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஜார்க்கண்ட்டின் தல்பூம்கார்க்கில் உள்ள அத்தகைய கைவிடப்பட்ட விமான தளமொன்றை மேம்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டதன் மூலம் நாட்டில் இத்திட்டத்தை செயல்படுத்த தொடங்கிய முதல் மாநிலமாக ஜார்க்கண்ட் மாறியுள்ளது.