TNPSC Thervupettagam

நாட்டின் பகுதிகளை வரைபடமாக்குவதற்கு ஆளில்லா விமானங்கள்

September 17 , 2019 2120 days 673 0
  • இந்தியக் கள ஆய்வு நிறுவனமானது (Survey of India - SoI) நாட்டின் பகுதிகளை வரைபடமாக்குவதற்கு முதன்முறையாக ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த இருக்கின்றது.
  • இந்தியப் புவியியலில் 75 சதவிகிதப் பகுதிகளை (2.4 மில்லியன் சதுர கி.மீ) வரைபடமாக்குவதற்கு ஏறத்தாழ 300 ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.
  • இதற்காக முன்னோடியில்லாத விவரங்கள் சேகரிக்கப்பட இருக்கின்றன.
  • கிராமங்களில் உள்ள நிலத்தின் உயர் தெளிவுத் திறன் கொண்ட வரைபடங்கள் கிராமங்களில் நிலப் பட்டாக்களை (நிலம் சார்ந்த விவரங்களை) டிஜிட்டல் மயமாக்க உதவும்.
  • தற்போது சிறந்த SoI வரைபடங்கள் 1 : 250000 என்ற அளவில் தெளிவுத் திறன் கொண்டவையாகும். அதாவது வரைபடத்தில் 1 செ.மீ ஆனது நிலப்பரப்பில் 2500 செ.மீ. என்ற அளவைக் குறிக்கும்.
  • இப்போது தயாரிக்கப்பட இருக்கும் வரைபடங்கள் 1: 500 என்ற அளவில் தெளிவுத்திறன் கொண்டதாக இருக்கும். அதாவது வரைபடத்தில் 1 செ.மீ ஆனது நிலப் பரப்பில் 500 செ.மீ. என்ற அளவைக் குறிக்கும்.
இதுபற்றி
  • இந்தியக் கள ஆய்வு நிறுவனமானது நாட்டின் தேசியக் கணக்கெடுப்பு மற்றும் வரைபடம்  ஆகியவற்றை மேற்கொள்ளும் ஒரு அமைப்பாகும்.
  • இது இந்திய அரசின் மிகப் பழமையான ஒரு அறிவியல் துறை ஆகும்.
  • இது 1767 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதன் தலைமையகம் உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் உள்ளது.
  • இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்