TNPSC Thervupettagam

நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு அமைப்பு

October 25 , 2025 11 days 55 0
  • நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு மற்றும் இடஞ்சார்ந்த முடிவெடுத்தல் ஆதரவு அமைப்பு (RTFF & SDSS) பெற்ற முதல் இந்திய நகரமாக சென்னை மாறியுள்ளது.
  • 107.2 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டமானது பாதிக்கப்படக் கூடிய பகுதிகளுக்கு நதி மற்றும் தெருக்கள் அளவிலான வெள்ள முன்னறிவிப்புகளை வழங்குகிறது.
  • இந்த அமைப்பு ஆனது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்கள் உட்பட சுமார் 4,974 சதுர கி.மீ பரப்பளவில் நிறுவப் பட்டுள்ளது.
  • இது அடையாறு, கூவம், கொசஸ்தலையாறு மற்றும் கோவளம் நதிகளின் துணைப் படுகைகளைக் கண்காணிக்கிறது.
  • RTFF & SDSS ஆனது மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை தளமான TNSMART உடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
  • முன்னறிவிப்புகள் ஆனது முக்கிய அரசு நிறுவனங்களுடன் பகிரப் பட்டு TN-Alert கைபேசி செயலி மூலம் புதிய தகவல்களைத் தேர்ந்தெடுக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்