நிதி ஆயோக், சங்கிலித் தொகுதி (Block Chain) முறையிலான பதிவேடு மற்றும் இணைய தள விவகாரங்கள் (Internet of Things) ஆகியவற்றின் மூலம் மருந்துகளின் உண்மைநேர விநியோகப் பாதையை கட்டுப்படுத்த ஆரக்கிள் (Oracle) நிறுவனத்துடன் ஒப்பந்தத் தீர்மானம் (Statement of Intent - SoI) ஒன்றில் கையெழுத்திட்டு இருக்கின்றது.
இதன் நோக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் பெருகி வரும் பிரச்சினையைத் தடுப்பதாகும். இம்முயற்சியில் ஸ்டிரைட்ஸ் பார்மா சயின்சஸ் (Strides Pharma Sciences) மற்றும் அப்போலோ மருத்துவமனை ஆகியோர் பங்கேற்பர்.
சங்கிலித் தொகுதி தொழில்நுட்பமானது, மருந்துகளைத் தயாரிப்பவரின் விநியோகப் பாதையில் அம்மருந்துகளை (வரிசை எண், ஸ்கேனிங், அடையாள அட்டை,) பற்றி நிரந்தரமாகப் பதிவு செய்ய உதவும்.