TNPSC Thervupettagam

நிதி ஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டம்

June 16 , 2019 2193 days 1115 0
  • நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின் 5-வது கூட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் புது தில்லியின் ராஷ்டிரபதி பவனில் நடத்தப் பட்டது.
  • நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டுறவுக் கூட்டாட்சிக் கொள்கைகளை உள்ளடக்கியுள்ளது.
  • இது தேசிய வளர்ச்சி இலக்குகளின் செயல்பாடுகளை விரைவுபடுத்துவதற்காக துறைகளுக்கிடையேயான பிரச்சினைகள் மற்றும் கூட்டாட்சிப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கான ஒரு தளமாக விளங்குகின்றது.
  • இந்தக் குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு:
    • இந்தியப் பிரதமர், அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள், சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநர்.
    • பதவி வழி உறுப்பினர்களாக 4 மத்திய அமைச்சர்கள்.
    • சிறப்பு அழைப்பாளர்களாக 3 மத்திய அமைச்சர்கள்.
  • 2024 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற இலக்கை இந்தியா எட்டும் என்று மோடி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்