நிதி ஆயோக் - வளர்ச்சி ஆராய்ச்சி மையம் பேச்சுவார்த்தை
November 4 , 2018 2389 days 767 0
நிதி ஆயோக்கும், சீன மக்கள் குடியரசினைச் சேர்ந்த அரசு சபையின் வளர்ச்சி ஆராய்ச்சி மையத்திற்கும் இடையேயான நான்காவது கட்ட பேச்சுவார்த்தை மும்பையில் நடத்தப்பட்டது.
ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின் போது சீன அதிபர் ஜீ ஜின்பிங்கிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இது இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே அமைச்சர்கள் மட்டத்திலான இரண்டாவது பேச்சுவார்த்தை ஆகும்.
நிதி ஆயோக் மற்றும் வளர்ச்சி ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுக்கு இடையேயான ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை அடுத்த வருடம் நவம்பர் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்தில் நடைபெறும்.