இது கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் சமீபத்தில் கண்டறியப்பட்டது.
இது பழந்திண்ணி வௌவால்களால் ஏற்படுத்தப்படும் விலங்கு வழி வைரஸ் ஆகும்.
வௌவால்கள் (அ) பன்றி போன்ற பிற தொற்று ஏற்பட்ட விலங்குகளுடன் (அ) உமிழ்நீர் அல்லது சிறுநீர் போன்ற அவற்றின் உடல் திரவங்களோடு நெருங்கிய தொடர்பு கொள்ளும் போது மனிதர்கள் இந்த வைரசினால் பாதிப்படையக் கூடும்.
விலங்கிலிருந்து மனிதனுக்கு முதலில் வைரஸ் பரவும் நிகழ்வு ‘ஸ்பில் ஓவர்’ நிகழ்வு அல்லது தொற்று நிகழ்வு என அறியப்படுகிறது.
மனிதனுக்குத் தொற்று ஏற்பட்டவுடன், இது மனிதர்களிடையே பரவத் தொடங்கும்.
இது அசுத்தமான உணவு மூலமாகவோ (இ) நேரடியாகவோ மக்களிடையே பரவுகிறது.
இந்த வைரஸ் தொற்றானது இந்தியாவில் இதுவரையில் மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.