TNPSC Thervupettagam

நிலச்சரிவு - நில அமிழ்தல் மண்டலம்

January 12 , 2023 950 days 515 0
  • உத்தரகாண்டில் உள்ள ஜோஷிமத் என்ற சிறிய நகரத்தில் அமைந்துள்ள மொத்தம் 4,500 கட்டிடங்களில் 610 கட்டிடங்கள் விரிசல் அடைந்த நிலையில் உள்ளது.
  • அதிகாரிகள் இந்தப் பகுதியினை நிலச்சரிவு - நில அமிழ்தல் மண்டலமாக அறிவித்து உள்ளனர்.
  • இது நிலத்தடிப் பொருட்களின் அகற்றம் அல்லது நகர்வு காரணமாக பூமியின் மேற் பரப்பில் படிப்படியாக தாழ்வு அல்லது திடீரென கீழிறங்குதல் நிகழ்வு ஆகும்.
  • தண்ணீர், எண்ணெய், இயற்கை எரிவாயு, அல்லது கனிம வளங்கள் நிலத்தில் இருந்து, குழாய் மூலம், பாறைகளை உடைப்பதன் மூலம் அல்லது சுரங்க நடவடிக்கைகளால் வெளியேற்றப் படுவதால் பெரும்பாலும் நில அமிழ்தல் ஏற்படுகிறது.
  • 1976 ஆம் ஆண்டு மிஸ்ரா குழுவின் அறிக்கையின்படி, ஜோஷிமத் ஒரு பிளவு தளத்தில் அமைந்துள்ளது.
  • ஜோஷிமத் ஒரு நிலச்சரிவு மிகுந்த அமைப்பு மீது (அதாவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு) அமைந்துள்ளது.
  • ஜோஷிமத் பத்ரிநாத் மற்றும் ஹேம்குண்ட் சாஹிப் செல்லும் பாதையில் அமைந்து உள்ளது.
  • இது அதிக ஆபத்துள்ள 'Zone-V' எனப்படும் நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்