நிலவில் டைட்டானியம் நிறைந்த பாறைகள் எவ்வாறு உருவானது என்பது குறித்து கரக்பூரின் இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் (PRL) இணைந்து புதிய ஆய்வை மேற்கொண்டுள்ளன.
பூமியில் உள்ள பாறைகளில் டைட்டானியம் டை ஆக்சைடு (TiO₂) 2%-க்கும் குறைவாகவே உள்ளது, ஆனால் நிலவின் பாறைகளில் இது 18% வரை மிக அதிகமாக உள்ளது.
நிலவின் உட்புற நிலையை ஆய்வு செய்ய அறிவியலாளர்கள் உயர் அழுத்தம் மற்றும் உயர் வெப்பநிலை சோதனைகளை நடத்தினர்.
நிலவின் மேலடுக்குப் பகுதியில் உருகும் மற்றும் கலக்கும் இரு-நிலை செயல்முறை நடைபெறுவதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
இல்மனைட் (டைட்டானியம் தாது) கொண்ட அடர்த்தியான அடுக்கு நிலவின் உட் புறத்தில் மூழ்கி உருகி, டைட்டானியம் நிறைந்த மாக்மாவை உருவாக்கியது.
இந்த மாக்மா பின்னர் நிலவின் மேற்பரப்பிற்கு வந்து டைட்டானியம் நிறைந்த எரிமலைப் பாறைகளாக மாறியது.