மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷ்தா (தேசியப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான முழுமையான முன்னேற்றத் திட்டம்) என்ற ஒருங்கிணைந்த ஆசிரியர்கள் பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
மேலும் இவர், நிஷ்தா முன்னெடுப்பின் வலை தளம், பயிற்சித் தொகுதிகள், முதன்மைக் கையேடு மற்றும் கைபேசிச் செயலி ஆகியவற்றையும் அதன் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்தார்.
கைபேசிச் செயலி மற்றும் கற்றல் மேலாண்மை அமைப்பு ஆகியவை தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஆணையத்தினால் மேம்படுத்தப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சித் திட்டமானது நாடெங்கிலும் ஏறத்தாழ 42 இலட்ச ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிப்பதன் மூலம் திறன்களைக் கட்டமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.