மத்தியப் புள்ளியியல் மற்றும் திட்ட செயல்படுத்துதல் துறை அமைச்சகமானது தேசியப் புள்ளியியல் தினக் கொண்டாட்டத்தின் போது இந்தியாவின் முதலாவது நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான (SDG - Sustainable Development Goal) தகவல் மேலாண்மை அமைப்பைத் (Dashhoard) தொடங்கியுள்ளது.
இது ஐக்கிய நாடுகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட செயல்நிரல் 2030 மீதான நாட்டின் செயல்பாடுகளைத் திறமையுடன் கண்காணிப்பதற்கான ஒரு முயற்சியாகும்.
இந்தியாவின் தேசிய வழிகாட்டுக் கட்டமைப்பின் மூலம் SDG மீதான தனது செயல்பாடுகளை மிக நுணுக்கத்துடன் இந்தியா கண்காணித்துக் கொண்டிருக்கின்றது. 2018 ஆம் ஆண்டில் இந்தியா SDG குறியீடு வெளியிடப்பட்டது.
உலக மக்கட் தொகையில் 17 சதவிகித மக்கட்தொகையைக் கொண்டுள்ள இந்தியாவின் SDG மீதான செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.