நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவினால் அமைக்கப்பட்ட குழுவானது தனது அறிக்கையைச் சமர்ப்பித்து உள்ளது.
சஞ்சீவ் கன்னா அவரது ராஜினாமாவைக் கோரியதாகவும், ஆனால் நீதிபதி வர்மா அதனை மறுத்து விட்டதாகவும் அறியப்படுகிறது.
இந்தியத் தலைமை நீதிபதி, நீதிபதி வர்மாவின் பரிந்துரையுடன், மூன்று நீதிபதிகள் கொண்ட ஒரு விசாரணைக் குழுவின் அறிக்கையைத் தற்போது குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு அனுப்பியுள்ளார்.
நீதிபதி வர்மாவைப் பதவி நீக்குவதற்கான ஒரு செயல்முறையைத் தொடங்குவதற்கு குடியரசுத் தலைவருக்கு அவர் பரிந்துரைத்ததாக அறியப்படுகிறது.