நீதிமன்றங்களுக்கான வரைவு செயற்கை நுண்ணறிவு விதிகள்
June 9 , 2026 5 days 86 0
நீதிமன்றங்களில் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துவதற்கான வரைவு ஒழுங்குமுறைகளை உச்ச நீதிமன்ற செயற்கை நுண்ணறிவு குழு வெளியிட்டுள்ளது.
இந்த வரைவு விதிகள், நீதித்துறை முடிவுகள், தண்டனை விவரங்கள், பிணை முடிவுகள் அல்லது சாட்சிகளின் நம்பகத்தன்மை ஆகியவற்றைத் தீர்மானிப்பதில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கின்றன.
வழக்கு மேலாண்மை, படியெடுத்தல் மற்றும் மொழியாக்கம் போன்ற பணிகளுக்கு AI அமைப்புகளை ஒரு துணைப் பங்கை வகிக்கும் வகையில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இந்த விதிகள் மனிதக் கண்காணிப்பைக் கட்டாயமாக்குகின்றன, மேலும் நீதிமன்ற செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மையற்ற அல்லது விளக்கமளிக்க முடியாத செயற்கை நுண்ணறிவு அமைப்புகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்கின்றன.
இந்த வரைவு ஒழுங்குமுறைகள் குறித்த பொதுமக்களின் கருத்துக்களை 2026 ஆம் ஆண்டு ஜூன் 20 வரை சமர்ப்பிக்கலாம்.