நந்தினி சுந்தர் & பிறர் Vs சத்தீஸ்கர் மாநிலம் என்ற வழக்கில், முந்தைய நீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணான ஒரு சட்டத்தைச் சட்டமன்றம் இயற்றுவதை அவமதிப்பாக கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
நாட்டின் பாராளுமன்றம் அல்லது மாநிலச் சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு சட்டத்தையும் நீதிமன்ற அவமதிப்பாகக் கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஒரு சட்டம் அரசியலமைப்பை மீறுவதாகவோ அல்லது எந்த ஒரு வகையிலும் அரசியல் அமைப்பு நீதிமன்றத்தினால் செல்லாததாகவோ அறிவிக்கப்படுகின்ற வரையில், ஒவ்வொரு மாநிலச் சட்டமன்றமும் எந்த ஒரு சட்டத்தையும் நிறைவேற்ற அது முழு அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
அரசியலமைப்பின் கீழ், இயற்றப்பட்ட சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை அல்லது பிற தன்மைகள் குறித்த விளக்கம் சார் சந்தேகங்கள் மற்றும் சர்ச்சைகளைத் தீர்க்கும் அதிகாரம் நீதித்துறையிடம் உள்ளது.
இருப்பினும், நீதிமன்றத்தின் விளக்கியுரைக்கும் இந்த அதிகாரமானது, சட்டமியற்றுச் செயல்பாடுகளைச் செயல்படுத்துவதையும், ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதையும் நீதிமன்ற அவமதிப்பு நிகழ்வாக அறிவிக்கும் சூழ்நிலையாகக் கருத்தில் கொள்ளாது.