நீர்நிலைகளில் மூழ்குவதைத் தடுப்பதற்கான உலக தினம் – ஜூலை 25
July 26 , 2021 1469 days 477 0
இது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் இயற்றப் பட்ட “Global Drowning Prevention” எனும் ஒரு தீர்மானத்தின் மூலம் அறிவிக்கப் பட்டது.
இந்த தீர்மானமானது அயர்லாந்து மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளின் ஒரு முன்னெடுப்பாகும்.
உலக சுகாதார அமைப்பின் மேற்கு பசிபிக் பகுதியில் நீர்நிலைகளில் மூழ்குவதால் ஏற்படும் உயிரிழப்பு அதிகமாக உள்ளது.
உலகின் பெரும்பாலான பகுதிகளில், மூழ்குவதால் ஏற்படும் உயிரிழப்புகளில் பாதியளவுக்கும் மேற்பட்டவை தென்கிழக்கு ஆசியப் பகுதிகளிலே ஏற்படுகின்றன.