மும்பை மற்றும் நவி மும்பை ஆகியவற்றுக்கு இடையே நீர்வழி வாடகை வாகனச் சேவையை மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்திற்கு சாகர்மாலா திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்பட்டது.
இது இந்தியாவில் இம்மாதிரியிலான முதல் திட்டமாகும்.
புதிதாகத் திறக்கப்பட்ட இந்த நீர்வழியானது, பேலாப்பூர், நெருல் மற்றும் எலிபெண்டா தீவுகள் ஆகிய பகுதிகளுக்கு நீர்வழி வாடகை வாகனச் சேவையைக் கொண்டு சேர்க்க வழி வகுக்கும்.
முதல் முறையாக, மும்பை மற்றும் நவி மும்பை ஆகியவை பயண நேரத்தைக் குறைக்கும் வகையிலான, நம்பகமான மற்றும் விரைவான ஒரு போக்குவரத்துச் சேவையினால் இணைக்கப்பட உள்ளன.