‘மாசுபாடு முதல் தீர்வு வரை: கடலிலுள்ள குப்பைகள் மற்றும் நெகிழி மாசுபாடு குறித்த உலகளாவிய மதிப்பீடு‘ என்ற அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது சுற்றுச்சூழலில் கடல் குப்பைகள் மற்றும் நெகிழி மாசுபாடுகளின் தாக்கம் மற்றும் சூழலமைவு, வனவிலங்கு மற்றும் மனிதர்களில் அவற்றின் விளைவுகள் குறித்து வெளிப்படுத்துகிறது.
கடலிலுள்ள நெகிழிகளின் அளவானது சுமார் 75 – 199 மில்லியன் டன்கள் என இந்த அறிக்கையில் மதிப்பிடப் பட்டுள்ளது.
சரியான நடவடிக்கை எடுக்கப் படவில்லையெனில் நீர்வாழிடங்களில் குவியும் நெகிழிக் கழிவுகளின் அளவானது 2040 ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 3 மடங்காகும் என கணிக்கப் பட்டுள்ளது.