TNPSC Thervupettagam

நீர் திவால் அறிக்கை 2026 - ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் (UNU-INWEH) அறிக்கை

February 4 , 2026 14 hrs 0 min 22 0
  • ஐக்கிய நாடுகள் சபை ஜனவரி 2026-ல் உலகளாவிய நீர் திவால் நிலை குறித்த ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டது.
  • அதற்கு “உலகளாவிய நீர் திவால்நிலை: நெருக்கடிக்குப் பிந்தைய காலத்தில் நமது நீரியல் வளங்களுக்கு அப்பாற்பட்டு வாழ்வது” என்று பெயரிடப்பட்டது.
  • இது ‘நீர் திவால்நிலை’ என்பதை, தொடர்ச்சியான பற்றாக்குறைகள் அல்லது சேதங்கள் காரணமாக பல நீர் அமைப்புகளால் அவற்றின் வரலாற்று அடிப்படை நிலைகளுக்குத் திரும்ப முடியாத ஒரு நிலை என வரையறுக்கிறது.
  • நீர் திவால்நிலை என்பது "திறனற்ற தன்மை மற்றும் மீளமுடியாத தன்மை ஆகிய இரண்டாலும் வரையறுக்கப்படும் ஒரு நிலை" என்று அந்த அறிக்கை கூறுகிறது.
  • திறனற்ற தன்மை என்பது, புதுப்பிக்கத்தக்க நீர்வரத்து மற்றும் பாதுகாப்பான வற்றல் வரம்புகளுக்கு அப்பால் நீரை எடுப்பதையும் மாசுபடுத்துவதையும் குறிக்கிறது.
  • மீளமுடியாத தன்மை என்பது, ஈரநிலங்கள் மற்றும் ஏரிகள் போன்ற நீர் தொடர்பான இயற்கை மூலதனத்தின் முக்கியப் பகுதிகளுக்கு ஏற்படும் சேதத்தைக் குறிக்கிறது என்பதோடு இது நீர் அமைப்பை அதன் ஆரம்ப நிலைக்கு மீட்டெடுப்பதை சாத்தியமற்றதாக்குகிறது.
  • புதுப்பிக்கத்தக்க நீர் ஓட்டங்களைத் தொடர்ந்து அதிகமாகப் பயன்படுத்துவதன் மூலம் பல நாடுகள் தங்கள் ‘நீர் அமைப்பு மிகைப் பயன்பாட்டு’ நிலைக்குள் நுழைந்துவிட்டன என்று ஐ.நா வாதிடுகிறது என்பதோடு இது ஆறுகள் மற்றும் பிற நீர்வழிகள் இயல்பான காலக்கெடுவில் தங்களைத் தாங்களே நிரப்பிக் கொள்ளும் திறனைக் குறைக்கிறது.
  • 1990-களின் முற்பகுதியில் இருந்து உலகின் பெரிய ஏரிகளில் பாதிக்கும் மேற்பட்டவை சுருங்கிவிட்டன, அதே நேரத்தில் 1970-லிருந்து சுமார் 35 சதவீதம் இயற்கை ஈரநிலங்கள் அழிக்கப்பட்டு விட்டன.
  • உலகின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட முக்கால் பகுதியினர் நீர் பாதுகாப்பற்ற அல்லது மிகக் கடுமையாக நீர் பாதுகாப்பற்ற என வகைப்படுத்தப்பட்ட நாடுகளில் வாழ்கின்றனர்.
  • சுமார் நான்கு பில்லியன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒரு மாதமாவது கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர்.
  • கடந்த ஐந்து தசாப்தங்களில் உலகம் தோராயமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பரப்பளவிற்குச் சமமான ஒரு பகுதி  என்ற அளவில் 410 மில்லியன் ஹெக்டேர் இயற்கை ஈரநிலங்களை இழந்துள்ளது.
  • உலகளாவிய நன்னீர் வளங்களில் இந்தியாவில் வெறும் 4% மட்டுமே உள்ளது.
  • இந்தியாவில் 1951-ஆம் ஆண்டிலிருந்து தனிநபர் நீர் கிடைக்கும் அளவு 73% குறைந்துள்ளது.
  • இந்தோ-கங்கைச் சமவெளி கடுமையான நிலத்தடி நீர் வற்றலுக்கான ஒரு முக்கியப் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • பல இந்திய நகரங்கள் "பூஜ்ஜிய நாள்" (முழுமையான வற்றல்) சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றன.
  • பூஜ்ஜிய நாள்’ என்பது ஒரு நகரம் அல்லது பிற இடத்தில் நீர் முற்றிலும் தீர்ந்து போகும் நிலையைக் குறிக்கப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும்.
  • இது 2018-ல் கேப் டவுன் நீர் பற்றாக்குறை நெருக்கடியின் போது பிரபலப்படுத்தப் பட்டது.
  • ஈரானில் உள்ள தெஹ்ரான் இப்போது தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக வறட்சியை எதிர் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்