TNPSC Thervupettagam

நீலகிரியின் மாவட்ட மலர்

September 7 , 2025 2 days 53 0
  • நீலகிரி லில்லியின் வளங்காப்பிற்கு உதவும் வகையில் நீலகிரியின் 'மாவட்ட மலர்' ஆக அதனை அறிவிக்க சூழலியல் வல்லுநர்கள் மற்றும் தாவரவியலாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • நீலகிரி லில்லி (லிலியம் வாலிச்சியானம் வர். நீல்கெரென்ஸ்) ஆனது நீலகிரி மற்றும் பழனி மலைகளில் மட்டுமே காணப்படுகிறது.
  • இது உயரமான புல்வெளிகளில் ஆகஸ்ட் மாத இறுதியில் மூன்று வாரங்கள் மட்டுமே பூக்கும்.
  • மேய்ச்சல், அயல் இனங்கள் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக அதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
  • விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பை அதிகரிக்க நீலகிரியின் மாவட்ட மலராக அதனை அறிவிக்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
  • முன்னதாக மணிப்பூர் அதன் வளங்காப்பிற்காக ஷிருய் லில்லியை அதன் மாநில மலராக அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்