நீலகிரி வரையாடு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகளைக் கணக்கெடுக்கும் மூன்றாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, மேற்கொள்ளப்பட்டது.
மாநிலங்களுக்கு இடையே இடம்பெயரும் விலங்குகளை இருமுறை கணக்கிடுவதைத் தவிர்ப்பதற்காக, கேரள வனத்துறையுடன் இணைந்து மேற்குத் தொடர்ச்சி மலையில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இது கன்னியாகுமரி முதல் கூடலூர் வரையிலான 3,100 கிலோமீட்டருக்கும் மேற்பட்ட பரப்பளவில் 14 வனக்கோட்டங்கள், 43 வனச்சரகங்கள், 124 வனப்பிரிவுகள் மற்றும் 177 கணக்கெடுப்புத் தொகுதிகளை உள்ளடக்கியது.
நிகழ்நேரத் தரவுச் சேகரிப்பு, GPS கண்காணிப்பு மற்றும் தரவறிக்கைக்காக “வருடை” என்ற அலைபேசி செயலி பயன்படுத்தப்பட்டது.
முந்தைய கணக்கெடுப்புகளில் 2024 ஆம் ஆண்டில் 1,031 நீலகிரி வரையாடுகளும், 2025 ஆம் ஆண்டில் 1,303 வரையாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இது இவற்றின் எண்ணிக்கை உயர்வு மற்றும் வாழ்விட மறுசீரமைப்பைக் காட்டுகிறது.