மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகமானது 2016 ஆம் ஆண்டு நெகிழிக் கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் விரிவுபடுத்தப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பினை ஒழுங்குமுறைபடுத்துவதற்காக ஒரு வரைவு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இந்த வரைவானது இந்தியாவில் நெகிழிப் பைப் பொட்டலக் கழிவுகளை உற்பத்தி செய்யும் தயாரிப்பாளர்கள், தயாரிப்புப் பொருள் உரிமையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கழிவுகளின் அளவை நிர்வகித்து ஒழுங்குபடுத்த வேண்டும் எனக் கூறுகிறது.