தேசிய மின்-விதான் செயலியை (நேவா) ஏற்றுக் கொள்வதற்கான தனது உறுதிப் பாட்டை மகாராஷ்டிர சட்டமன்றம் வெளிப்படுத்தியுள்ளது.
இது இந்திய அரசின் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ஒரு திட்டப் பணியாகும்.
சட்டமன்றப் பணிகளை மேற்கொள்வதற்காக, அனைத்து 37 மாநில மற்றும் ஒன்றியப் பிரதேச சட்டமன்றங்களையும் ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளம் மூலம் டிஜிட்டல் மயமாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது “ஒரே தேசம், ஒரே செயலி” என்ற தொலைநோக்குப் பார்வையாகும்.
இது உறுப்பினர்கள் தங்கள் சட்டமன்றப் பொறுப்புகளை மிகவும் திறமையாக நிறைவேற்ற உதவுவதோடு, குடிமக்களுக்கு சட்டமன்றப் பணிகள் மற்றும் நடவடிக்கைகளை எளிதாக அணுகவும் வழிவகுக்கும்.
இவ்வாறு, இது வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தி, பொதுமக்களின் பங்கேற்பை வலுப்படுத்தி, டிஜிட்டல் முறையில் வலுவூட்டப்பட்ட சட்டமன்றச் சூழலுக்குப் பங்களிக்கும்.
2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள், 21 சட்டமன்றங்கள் ஏற்கனவே முழுமையாக டிஜிட்டல் அவைகளாக மாறியுள்ளன.