TNPSC Thervupettagam
June 10 , 2020 1859 days 674 0
  • புது தில்லியின் நவீன கலைக்கான தேசியக் கலைக்கூடமானது இணையவழியாக நைமிஷா 2020 எனும் ஒரு கோடைக்கால கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய உள்ளது.
  • இது கலைஞர்களிடமிருந்துப் பங்கேற்பாளர்களுக்கும் கலை ஆர்வலர்களுக்கும் கலையை உருவாக்குவதற்கும் மற்றும் அதனைக் கற்றுக் கொள்வதற்கும் தேவையான வாய்ப்பை வழங்குவதற்கான ஒரு முயற்சியாகும்.
  • இந்த நிகழ்ச்சியிலிருந்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைப் படைப்புகளின் ஒரு கண்காட்சி நவீன கலைக்கான தேசியக்  கலைக்கூடத்தின் கலை ஊடகத் தளமான சோஹாமில் காட்சிப் படுத்தப்படும்.
  • நவீன கலைக்கான தேசியக் கலைக்கூடமானது  1954 ஆம் ஆண்டில் புது தில்லியின் ஜெய்ப்பூர் மாளிகையில் நிறுவப் பட்டது.
  • இது இந்திய அரசாங்கத்தின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் ஒரு துணைநிலை  அலுவலகமாக நடத்தப்பட்டு நிர்வகிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்