கடல்வழி சரக்குப் போக்குவரத்து அமைச்சகமானது பசுமை சரக்கு வழித்தடம் – 2 வழியிலான முதல் பயணத்தைத் தொடங்கி வைத்துள்ளது.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த சேவையின் முதல் கட்டமானது கொச்சினை பேய்ப்பூர்-ஆழிக்கல் ஆகியவற்றுடன் இணைக்கும், பிந்தையக் காலகட்டங்களில் கேரளாவிலுள்ள கொல்லம் துறைமுகமும் இணைக்கப்படும்.
கடல்சார் வர்த்தகத்தினை மேம்படுத்துவதன் மூலம் முக்கிய மற்றும் இதர துறைமுகங்களுக்கிடையேயான இணைப்பு மற்றும் இணைதிறனையும் இது மேம்படுத்தும்.