பஞ்சாப் மெயில் இரயிலானது நாட்டின் மிகப் பழமையான தொலைதூரம் செல்லும் ரயில்களில் ஒன்றாகும்.
இது 2019 ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று தனது 107 ஆம் வருடத்தை நிறைவு செய்தது.
முன்னர் பஞ்சாப் லிமிட்டெட் என்று அழைக்கப்பட்ட இந்த இரயிலானது மும்பையிலிருந்து பெஷாவர் வரையிலான தனது முதல் பயணத்தை 1912 ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று தொடங்கியது.
பெஷாவர் நகரம் தற்போது பாகிஸ்தானில் உள்ளது.
இது ஆங்கிலேயர் காலத்திய இந்தியாவின் அதிவேக இரயிலாக அறியப்பட்டது.
பிரிவினைக்கு முன்னதாக இந்த இரயிலானது மும்பையின் பெல்லார்டு பியர் மோல் நிலையத்திலிருந்து பெஷாவர் வரையிலான 2496 கி.மீ தொலைவை 47 மணி நேரத்தில் கடந்து சென்றது.
தற்போது சத்ரபதி சிவாஜி மகாராஜா நிலையத்திலிருந்துத் தொடங்கி ரோஷ்பூர் கண்டோன்மெண்ட் வரையிலான இதன் வடக்கு நோக்கிய 1930 கி.மீ தூர பயணத்தை இது 34 மணிநேரம் 15 நிமிடத்தில் கடக்கிறது.