TNPSC Thervupettagam

பஞ்சாப் மெயில் இரயிலின் 107 வது வருடம்

June 4 , 2019 2207 days 749 0
  • பஞ்சாப் மெயில் இரயிலானது நாட்டின் மிகப் பழமையான தொலைதூரம் செல்லும் ரயில்களில் ஒன்றாகும்.
  • இது 2019 ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று தனது 107 ஆம் வருடத்தை நிறைவு செய்தது.
  • முன்னர் பஞ்சாப் லிமிட்டெட் என்று அழைக்கப்பட்ட இந்த இரயிலானது மும்பையிலிருந்து பெஷாவர் வரையிலான தனது முதல் பயணத்தை 1912 ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று தொடங்கியது.
  • பெஷாவர் நகரம் தற்போது பாகிஸ்தானில் உள்ளது.
  • இது ஆங்கிலேயர் காலத்திய இந்தியாவின் அதிவேக இரயிலாக அறியப்பட்டது.
  • பிரிவினைக்கு முன்னதாக இந்த இரயிலானது மும்பையின் பெல்லார்டு பியர் மோல் நிலையத்திலிருந்து பெஷாவர் வரையிலான 2496 கி.மீ தொலைவை 47 மணி நேரத்தில் கடந்து சென்றது.
  • தற்போது சத்ரபதி சிவாஜி மகாராஜா நிலையத்திலிருந்துத் தொடங்கி ரோஷ்பூர் கண்டோன்மெண்ட் வரையிலான இதன் வடக்கு நோக்கிய 1930 கி.மீ தூர பயணத்தை இது 34 மணிநேரம் 15 நிமிடத்தில் கடக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்