TNPSC Thervupettagam

படைச்சிறுத்தை பாதுகாப்புச் செயல் திட்டம்

August 7 , 2026 2 days 50 0
  • வடகிழக்கு இந்தியாவில் உள்ள இந்த அரிய வகை காட்டுப் பூனையைப் பாதுகாப்பதற்காக சர்வதேச படைச்சிறுத்தை தினத்தில் (2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4) இந்தியா படைச்சிறுத்தை பாதுகாப்புச் செயல் திட்டத்தை (CAP) தொடங்கியது.
  • இந்தச் செயல் திட்டமானது இந்திய அரசு-உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (GEF)-ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP) முன்னெடுப்பின் கீழ் தயாரிக்கப்பட்டது மற்றும் தமிழ்நாடு, கோயம்புத்தூரில் நடைபெற்ற தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழுவின் (SCNBWL) 91-வது கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
  • இத்திட்டம் வடகிழக்கு இந்தியாவில் முன்னுரிமை அளிக்க வேண்டிய 14 பாதுகாப்பு நிலப்பரப்புகளை அடையாளப்படுத்துகிறது மற்றும் வாழ்விடப் பாதுகாப்பு, வனப் பாதைகள் மறுசீரமைப்பு மற்றும் நிலப்பரப்பு அளவிலான பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • கேமரா பொறிகள், ஆக்கிரமிப்பு ஆய்வுகள், மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் டிஎன்ஏ (eDNA) முறைகள் மூலம் அறிவியல் ரீதியான கண்காணிப்பு இதில் அடங்கும்.
  • பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த வனவிலங்கு வாழ்விடங்கள் மேம்பாட்டு (IDWH) திட்டத்தின் இனங்கள் மீட்பு திட்டத்தின் கீழ் இந்த இனம் சேர்க்கப்பட்டுள்ளது.
  • வேட்டையாடுதல் தடுப்பு நடவடிக்கைகள், முன்களப் பணியாளர்களுக்கான பயிற்சி, சமூகப் பங்கேற்பு, நிலையான வாழ்வாதாரங்கள் மற்றும் பருவநிலை-தாங்கும் பாதுகாப்பு ஆகியவற்றிலும் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்