TNPSC Thervupettagam

படைப்பிரிவு தலைமைத் தளபதி ஆகும் 5 பெண் அதிகாரிகள்

August 26 , 2021 1448 days 609 0
  • இந்திய இராணுவத்தின் தேர்வு வாரியமானது முதல்முறையாக 5 பெண் அதிகாரிகளை படைப் பிரிவு தலைமைத் தளபதி என்ற பதவிக்கு உயர்த்தியுள்ளது.
  • இந்த 5 பெண் அதிகாரிகளும் ஏற்கனவே 26 வருடச் சேவையை நிறைவு செய்து உள்ளனர்.
  • படைப்பிரிவு தலைமைத் தளபதி (கர்னல்) எனும் பதவிக்கு  உயர்த்தப்பட்ட அந்த 5 பெண் அதிகாரிகள் பின்வருமாறு
  • மின்னணு மற்றும் இயந்திர பொறியாளர்கள் படைப்பிரிவின் துணைத்தளபதி நவ்நீத் துகால் மற்றும் துணைத் தளபதி சோனியா ஆனந்த்,
  • சமிக்ஞை படைப்பிரிவின் துணைத்தளபதி சங்கீதா சர்தனா, பொறியாளர்கள் படைப்பிரிவின் துணைத்தளபதி ரிச்சா சாகர் மற்றும் துணைத்தளபதி ரீனு கன்னா ஆகியோராவர்.
  • இதற்கு முன்பாக, இராணுவக் கல்விப் படை, இராணுவத் தலைமை சட்ட அதிகாரி மற்றும் இராணுவ மருத்துவப் படை ஆகியவற்றில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் மட்டுமே படைப்பிரிவு தலைமைத் தளபதி என்ற பதவிக்கு உயர்வு அளிக்கப்பட தகுதி உடையவர்களாக அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்