பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளுக்கு எதிரான தேசிய உதவி எண்
December 16 , 2021 1344 days 576 0
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மீதான வன் கொடுமைகளுக்கு எதிரான ஒரு தேசிய உதவி எண்ணினை வெளியிட்டார்.
அனைவரின் மீதான பாகுபாட்டினை முடிவுக்குக் கொண்டு வந்து அனைவருக்கும் பாதுகாப்பினை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட சட்டத்தின் விதிகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த உதவி எண்ணின் ஒரு நோக்கம் ஆகும்.
14566 என்ற அந்த இலவச உதவி எண்ணானது 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும்.