இந்திய ரிசர்வ் வங்கியானது, அதன் பணவியல் கொள்கைக் குழுவின் 55வது கூட்டத்திற்குப் பிறகு அதன் சமீபத்தியப் பணவியல் கொள்கைப் புதுப்பிப்புகளை அறிவித்துள்ளது.
கொள்கை சார் ரெப்போ விகிதம் ஆனது உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 50 அடிப்படைப் புள்ளிகள் (bps) குறைக்கப்பட்டு 5.50 சதவீதமாக உள்ளது.
2026 ஆம் நிதியாண்டிற்கான பணவீக்கக் கணிப்பு முந்தைய 4 சதவீதத்திலிருந்து 3.7 சதவீதமாக திருத்தப்பட்டுள்ளது.
2025-26 ஆம் ஆண்டிற்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2024-25 ஆம் நிதியாண்டில், வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக இருந்தது என்ற நிலையில் இது நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் குறைவாகும்.
SDF விகிதம் 5.25% ஆகவும், MSF/வங்கி விகிதம் 5.75% ஆகவும் திருத்தப்பட்டது.
இது ரொக்க இருப்பு விகிதத்தை 1% என்ற மிகப்பெரிய அளவிற்குக் குறைக்க முடிவு செய்தது.
இது வங்கி அமைப்பில் 2.5 லட்சம் கோடி ரூபாய்களைப் பணப் புழக்கத்தில் விட வழி வகுக்கும்.
நான்கு சம தவணைகளில் மேற்கொள்ளப் படும் ஒரு குறைப்பை அடுத்து, நிகர தேவை மற்றும் நேரக் கடமைகளில் இந்த ரொக்க இருப்பு விகிதமானது 3 சதவீதமாக இருக்கும்.