பணைய தீநிரல் எனப்படும் மென்நிரலுக்கு எதிரான பயிற்சி
September 11 , 2022 1386 days 641 0
தேசியப் பாதுகாப்புச் சபைச் செயலகம் (NSCS) மற்றும் ஐக்கிய இராஜ்ஜிய அரசு ஆகியவை இணைந்து 26 நாடுகளுக்கான காணொளி வாயிலான இணையவெளிப் பாதுகாப்புப் பயிற்சியை நடத்தின.
இந்தப் பயிற்சியானது, பிரிட்டிஷ் வான்வெளி (BAE) அமைப்புகளால் உருவாக்கப்பட்ட, இந்தியா தலைமையிலான சர்வதேசப் பணைய தீநிரல் எனப்படும் மென்நிரலுக்கு எதிரான முன்னெடுப்பு நெகிழ்திறன் செயற்குழுவின் ஒரு பகுதியாகும்.