குஜராத் மாநிலத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயி வீட்டில் வளர்க்கப்படும் பண்ணி இன எருமையில் மூலம் இந்தியாவின் முதலாவது செயற்கைக் கருத்தரிப்பு மூலம் உருவான கன்று ஒன்று பிறந்தது.
பன்ணி இன எருமையானது குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் பெருமளவில் காணப் படுகிறது.
பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக வேண்டி மரபணு ரீதியில் உயர்வகையான எருமைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் இந்த செயற்கைக் கருத்தரிப்பு முறையானது மேற்கொள்ளப் பட்டது.
தானேஜ் கிராமத்தைச் சேர்ந்த பால் பண்ணையாளருக்கு உரிமையான பன்ணி எருமை, செயற்கைக் கருத்தரிப்பு மூலமான (சோதனைக் குழாய்) ஒரு ஆண் கன்றினை ஈன்றது.