புது தில்லியில் பயிர்க் கழிவு மேலாண்மை குறித்த மாநாட்டின் போது மத்திய வேளாண் துறை இணையமைச்சர் பார்சோத்தம் ருபாலா “CHC பண்ணை இயந்திரம்” என்ற ஒரு பன்மொழிக் கைபேசிச் செயலியைத் தொடங்கி வைத்தார்.
நோக்கம்: இந்தச் செயலியானது விவசாயிகளைத் தங்கள் பகுதியில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையங்களுடன் இணைக்கின்றது.
இதன் மூலம் விவசாயிகள் தங்கள் வீடுகளில் அதிநவீன தொழில்நுட்பத்தைக் குறைந்த விலையில் பெற முடியும்.
வாடகைக்கு எடுக்கப்படும் பெரும்பாலான பண்ணை உபகரணங்கள்: ரோட்டாவேட்டர், சுழிய உழவு இயந்திரங்கள், உருளை விதைப்புக் கருவி, பலபயிர் விதைப்புக் கருவி, களையெடுக்கும் கருவி மற்றும் தட்டு போன்ற வெட்டும் கருவி.