பண்ணை சார்ந்த சூரிய சக்தி நிலையத்தை அமைக்கும் முதல் மாநிலம்
April 8 , 2021 1522 days 758 0
இராஜஸ்தான் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனமானது (RRECL - Rajasthan Renewable Energy Corporation Ltd) இராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள கோட்புத்லி பகுதியின் பலோஜி கிராமத்தில் இந்தியாவின் முதல் பண்ணை சார்ந்த சூரிய சக்தி நிலையத்தை அமைத்துள்ளது.
இது PM-KUSUM (Pradhan Mantri – Kisan Urja Suraksha Evam Utthan Mahabhiyan) என்ற திட்டத்தின் கீழ் அமைக்கப் பட்டுள்ளது.
PM-KUSUM
இத்திட்டம் 2019 ஆம் ஆண்டில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
இது 2022 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் முயற்சிகளுள் ஒன்றாகும்.
இத்திட்டம் நிதி மற்றும் நீர் ஆகியவற்றைத் தொடர்ந்து வழங்குவதனை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்டது.