TNPSC Thervupettagam

பதல்பானி–கலகுண்ட் பாதை

August 7 , 2025 15 days 64 0
  • இந்திய இரயில்வே நிர்வாகமானது, மத்தியப் பிரதேசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க (155 ஆண்டுகள் பழமையான) பதல்பானி-கலகுண்ட் என்ற பாரம்பரிய இரயிலின் இயக்கத்தினை மீண்டும் தொடங்கியுள்ளது.
  • இது டாக்டர் அம்பேத்கர் நகர் (முன்னர் மோவ் என்றழைக்கப்பட்ட) முதல் காண்ட்வா வரையிலான பாதையில் 9.5 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு பகுதியாகும்.
  • இந்தப் பாதையை, 1844 முதல் 1886 ஆம் ஆண்டு வரையில் ஆட்சி செய்த மகாராஜா இரண்டாம் துகோஜி ராவ் ஹோல்கர் முன்மொழிந்தார்.
  • 1870 ஆம் ஆண்டில், இந்தூருக்கு இரயில் பாதை அமைப்பதற்காக 101 ஆண்டுகளுக்கு 1 கோடி ரூபாய் கடனும், இலவச நிலமும் வழங்கினார்.
  • இந்தூர் சமஸ்தானம் ஆனது, 1818 ஆம் ஆண்டில் ஹோல்கர் வம்சத்தின் கீழ் பிரிட்டிஷ் கீழான காப்பு நாடாக மாறியதால், ரயில்வே மேம்பாட்டின் தேவையை உருவாக்கியது.
  • பதல்பானி–கலகுண்ட் பாதை இந்திய இரயில்வே நிர்வாகத்தின் ஆறு பாரம்பரியப் பாதைகளில் ஒன்றாகக் கருதப்பட்டாலும், இன்னும் இரயில்வே வாரியத்தின் அதிகாரப் பூர்வச் சான்றிதழுக்காகக் காத்திருக்கிறது.
  • 2008 ஆம் ஆண்டில், 472.64 கிலோமீட்டர் நீளமுள்ள இரத்லம்-மோவ்-கண்ட்வா-அகோலா வழித்தடத்தினை அகல இரயில் பாதையாக (BG) மாற்ற என்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • புவியியல் சிக்கல்கள் காரணமாக பதல்பானி-கலகுண்ட் பிரிவில் அகல இரயில் பாதை அமைக்கும் பணிகள் சாத்தியமில்லை.
  • இந்திய இரயில்வே நிர்வாகமானது, பின்னர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியை பாரம்பரிய இரயில்களின் இயக்கத்திற்கான பாதையாக மாற்ற முடிவு செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்