பதினைந்து புதிய நீதிபதிகள் - சென்னை உயர் நீதிமன்றம்
August 14 , 2026 30 days 172 0
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, 15 புதிய நீதிபதிகளுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
உயர் நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 75 ஆக உள்ள நிலையில், தற்போது பணியாற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக இதன் மூலம் உயர்ந்துள்ளது.
வழக்கறிஞர் பிரிவிலிருந்து பதவி உயர்வு பெற்ற எட்டு பேரில், முதல் ஐந்து பேர் நேரடியாக உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்; மீதமுள்ளவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.
இந்நீதிமன்றத்தில் 13 பெண் நீதிபதிகள் இருப்பது பெருமைக்குரிய விஷயமாகும்; இது நாட்டின் அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் உள்ள பெண் நீதிபதிகளின் எண்ணிக்கையில் மிக அதிகபட்சமாகும்.
தற்போது நீதிபதிகளின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 75 ஆக உள்ளது.
அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 18-ஆக இருந்த காலத்தில்கூட, நீதிபதிகளின் எண்ணிக்கை ஒருபோதும் முழு அளவை எட்டியதில்லை.