TNPSC Thervupettagam

பதிலீட்டு வழித் தலைமைத்துவம்

March 5 , 2025 59 days 90 0
  • பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தினால் (MoPR) அமைக்கப்பட்ட குழுவானது, நிரூபிக்கப் பட்ட பதிலீட்டு வழித் தலைமைத்துவ வழக்குகளில் "மிகப்பெரியத் தண்டனைகளை" பரிந்துரைத்துள்ளது.
  • நாடு முழுவதும் உள்ள கிராமப் பஞ்சாயத்துகளில் நிலவும் 'பிரதான் பதி', 'சர்பஞ்ச் பதி' அல்லது 'முக்கிய பதி' போன்ற நடைமுறைகளைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
  • இதில் பரிந்துரைக்கப்பட்ட பிற முன்னெடுப்புகள்:
    • கேரளா போன்று சில பஞ்சாயத்து துறைக் குழுக்கள் மற்றும் மன்ற அளவிலான குழுக்களில் பிரத்தியேக பாலினம் சார் ஒதுக்கீடுகள்;
    • பிரதான் பதி எதிர்ப்பு சாம்பியன்களுக்கான வருடாந்திர விருது;
    • மகளிர் குறைதீர்ப்பாளர்களை நியமித்தல்;
    • கிராம சபைகளில் மகளிர் பிரதான்களின் பொதுவெளி பதவியேற்பு;
    • பெண் பஞ்சாயத்துத் தலைவர்களின் கூட்டமைப்பை உருவாக்குதல்; மற்றும்
    • தலைமைத்துவப் பயிற்சி, சட்ட ஆலோசனை மற்றும் ஆதரவு வலையமைப்புகள் ஆகியவற்றுக்கான மையங்களாகச் செயல்படும் வகை பாலின வள மையங்களை அமைத்தல்.
  • இந்தியாவில் கிராமப் பஞ்சாயத்து (ஒரு கிராம அளவில்), பஞ்சாயத்து சமிதி (தொகுதி மட்டத்தில்) மற்றும் ஜில்லா பரிஷத் (மாவட்ட அளவில்) போன்ற மூன்று நிலைகளிலும் 32.29 லட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் சுமார் 2.63 லட்சம் பஞ்சாயத்துகள் உள்ளன.
  • இதில் 15.03 லட்சம் (46.6 சதவீதம்) பேர் பெண்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்