உள்துறை அமைச்சகம் இந்தியாவின் முதல் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கையை வெளியிட்டு, அதற்கு PRAHAAR என்று பெயரிட்டுள்ளது.
நீர், நிலம், வான்வெளி மற்றும் இணையவெளி மூலம் இந்தியா பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது என்று PRAHAAR கூறுகிறது.
இது எல்லை தாண்டிய பயங்கரவாதம், அல்-கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசு போன்ற உலகளாவிய குழுக்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மற்றும் மறைகுறியாக்கப்பட்ட தளங்களின் தவறான பயன்பாடு ஆகியவற்றின் மூலம் வரும் அச்சுறுத்தல்களை எடுத்துக்காட்டுகிறது.
இந்தக் கொள்கை மின்சாரம், ரயில்வே, விமானப் போக்குவரத்து, துறைமுகங்கள், பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணுசக்தி போன்ற முக்கிய துறைகளின் பாதுகாப்பை உள்ளடக்கியது.
இது சட்டப்பூர்வ நடவடிக்கை, தீவிரவாதம் நோக்கிய வழிநடத்தல் ஒழிப்பு, இணைய வெளி கண்காணிப்பு மற்றும் மாநிலங்களுக்கும் மத்திய அரசின் நிறுவனங்களுக்கும் இடையிலான சிறந்த ஒருங்கிணைப்பு ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது.