பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்தை, தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்புத் திட்டங்களுக்காக) சட்டம், 2023 இன் கீழ் ஒரு "சிறப்புத் திட்டம்" என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நிலம் கையகப்படுத்துதல் மற்றும் ஒப்புதல் செயல்முறைகளை விரைவுபடுத்தச் செய்வதற்காக இத்திட்டம் சிறப்புத் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் கீழ், 100 ஹெக்டேருக்கு மேல் நிலம் தேவைப்படும் திட்டங்களுக்கு விரைவான நில ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக சிறப்புத் திட்டங்களாக அறிவிக்க முடியும்.
இந்த விமான நிலையத் திட்டத்திற்கு 5,746 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது, அதில் இதுவரை சுமார் 1,700 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்தவும், வரைவு நில ஒருங்கிணைப்புத் திட்டத்தைத் தயாரிக்கவும் மாநில அரசு ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைக்கும்.
₹27,400 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் நான்கு கட்டங்களாகத் திட்டமிடப்பட்டு உள்ளதுஎன்பதோடு இது நிறைவடைந்த பிறகு ஆண்டுக்கு 10 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும்.