திருவள்ளுவர் மாவட்டத்தின் மப்பேடு என்னுமிடத்தில் ஒரு பல்முனை தளவாடப் பூங்காவினை நிறுவுவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமானது கையெழுத்தானது.
இது தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம், தேசிய நெடுஞ்சாலைத் தளவாட மேலாண்மை நிறுவனம் மற்றும் சென்னை துறைமுக நிறுவனம் ஆகியவை இடையே மேற்கொள்ளப்பட்டது.
சென்னைப் புறநகர் சாலைப் பகுதியில் நிறுவப்பட உள்ள இந்தப் பூங்காவானது சென்னை விமான நிலையம், சென்னைத் துறைமுகம், காமராஜர் துறைமுகம், காட்டுப் பள்ளி துறைமுகம் ஆகியவற்றை இணைக்கும்.