பள்ளிகளுக்கான புத்தாக்க சபை பற்றியத் தகவல்களை கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூரண தேவி பகிர்ந்துள்ளார்.
இது கல்வி அமைச்சகத்தின் புத்தாக்கப் பிரிவினால் தொடங்கப்பட்டது.
இது தொழில் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட குழுவாகும்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு குறித்து ஆண்டு முழுவதுமான நிகழ்வுகளை நடத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு தேசியப் புத்தாக்கம் மற்றும் தேசியக் கல்விக் கொள்கையில் வலியுறுத்தப் பட்டுள்ளபடி, பள்ளிக் கல்வியில் புத்தகங்களில் உள்ளவற்றை தாண்டியக் கருத்துகளைச் சேர்ப்பதை இது ஊக்குவிக்கும்.
இது புத்தாக்கம் சார்ந்த செயல்பாடுகளின் அடிப்படையில் பள்ளிகளுக்கான தர வரிசை முறையைச் செயல்படுத்த உள்ளது.