TNPSC Thervupettagam

பழங்குடியின மரபணு வரிசையாக்கத் திட்டம் - குஜராத்

November 13 , 2025 2 days 35 0
  • பழங்குடியினச் சமூகங்களுக்காக என்று பிரத்தியேகமாக மரபணு வரிசைமுறை முன்னெடுப்பினைத் தொடங்கிய முதல் இந்திய மாநிலமாக குஜராத் திகழ்கிறது.
  • பழங்குடியின மரபணு வரிசையாக்கத் திட்டம் ஆனது 17 மாவட்டங்களில் உள்ள பழங்குடியின மக்களிடமிருந்து 2,000 நபர்களின் மரபணுக்களை வரிசைப்படுத்தும்.
  • "குஜராத்தில் பழங்குடியின மக்களுக்கான குறிப்பு மரபணு தரவுத் தளத்தை உருவாக்குதல்" என்ற தலைப்பில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப் படுகிறது.
  • இது குஜராத் உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தினால் (GBRC) செயல்படுத்தப் படுகிறது.
  • இது 2025–26 ஆம் ஆண்டின் மாநில நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிதியளிக்கப்படுகிறது.
  • இந்த முன்னெடுப்பு அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை, தலாசீமியா மற்றும் பரம்பரை வழி புற்றுநோய்கள் போன்ற மரபணு கோளாறுகளைக் கண்டறிந்து, ஆரம்ப கால நடவடிக்கை மற்றும் துல்லியமான சுகாதாரப் பராமரிப்பை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சேகரிக்கப்பட்ட மரபணுத் தரவுகள், மேம்பட்டத் தொழில்நுட்பம் மூலம் பழங்குடிச் சமூகங்களை மேம்படுத்தும் அதே வேளையில், இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்திக்கான குறிப்பான்களை அடையாளம் காணவும், தனிப் பயனாக்கப்பட்ட சுகாதாரப் பாதுகாப்புத் தீர்வுகளை ஆதரிக்கவும் உதவும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்