இந்தியக் கடற்படையின் மேற்குக் கடற்படைப் பிரிவானது மேற்குக் கடற்கரையின் அருகே பஸ்சிம் லேஹர் (XPL – 2022) எனப்படும் ஒரு கூட்டுக் கடல்சார் பயிற்சியினை மேற்கொண்டது.
இந்தப் பயிற்சியானது இந்தியக் கடற்படை, இந்திய விமானப் படை, இந்திய ராணுவம் மற்றும் கடலோரக் காவற்படை ஆகியவற்றின் இடையேயான ஒரு ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது.
மேற்குக் கடற்படைப் பிரிவானது இந்தியக் கடற்படையின் 3 படைப் பிரிவுகளுள் ஒன்றாகும் (தலைமையகம் – மும்பை).
இதர இரண்டு படைப் பிரிவுகளாவன; கிழக்குக் கடற்படைப் பிரிவு (தலைமையகம் – விசாகப் பட்டினம்) மற்றும் தெற்குக் கடற்படைப் பிரிவு (தலைமையகம் – கொச்சின்).