செயற்கை நுண்ணறிவு (AI) விநியோகச் சங்கிலிகள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் குறித்த அமெரிக்க தலைமையிலான கட்டமைப்பான 'பாக்ஸ் சிலிக்கா' முன்னெடுப்பில் இணைய ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்காவால் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட பாக்ஸ் சிலிக்கா முன்னெடுப்பானது, குறைக்கடத்திகள், முக்கியமான கனிமங்கள், எரிசக்தி மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு உள்ளிட்ட AI சுற்றுச்சூழல் விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது.
இந்த முன்னெடுப்பானது, நட்பு நாடுகளிடையே உணர்திறன் வாய்ந்த AI தொடர்பான தொழில்நுட்பங்களுக்கான ஒருங்கிணைந்த ஏற்றுமதி கட்டுப்பாடுகளை ஊக்குவிக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இணைவானது, விரிவான வர்த்தகக் கட்டமைப்பின் கீழ் 40 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அமெரிக்க AI சில்லுகளை வாங்குவதற்கான வணிக உறுதிப்பாட்டை உள்ளடக்கியது.
இங்கிலாந்து, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகள் உட்பட பல நாடுகள் ஏற்கனவே இந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக உள்ளன.