TNPSC Thervupettagam

பாசுமதி அரிசிக்கு FSSAI அமைப்பின் ஒழுங்குமுறை தரநிலைகள்

January 18 , 2023 940 days 399 0
  • இந்தியாவில் முதன்முறையாக, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது பாசுமதி அரிசிக்கான அடையாளத் தர நிலைகளைக் குறிப்பிட்டு உள்ளது.
  • இது 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
  • பாசுமதி அரிசியின் வர்த்தகத்தில் நியாயமான நடைமுறைகளை நிறுவுதல் மற்றும் உள்நாட்டிலும் உலக அளவிலும் உள்ள நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • பாசுமதி அரிசியானது பாசுமதி அரிசியின் இயற்கையான வாசனைப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
  • 2-அசிடைல்-1-பைரோலின் என்ற வேதிப் பொருள் இருப்பதால் இது ஒரு தனித்துவமான மணம் மற்றும் சுவை கொண்டுள்ளது.
  • இது செயற்கை வண்ணம், பொலிவுக் காரணிகள் மற்றும் செயற்கை நறுமணங்கள் ஆகியவை இல்லாமல் இருக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்