ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி முதல் பாமாயில் ஏற்றுமதியைத் தடை செய்ய இந்தோனேசியா முடிவு செய்துள்ளது.
உள்நாட்டில் கிடுகிடுவென உயர்ந்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டில் உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் வேண்டி இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டது.
உலகிலேயே அதிகளவில் பாமாயில் ஏற்றுமதி செய்யும் நாடு இந்தோனேசியா ஆகும்.