பாரதிய போஷன் கிருஷி கோஷ் திட்டமானது பில் கேட்ஸ் என்பவருடன் இணைந்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஸ்மிருதி இராணி என்பவரால் புது தில்லியில் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்திற்காக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்புடன் கூட்டு சேர்ந்துள்ளது.
இது 128 வேளாண் காலநிலை மண்டலங்களில் உள்ள பல்வேறு பயிர்களின் களஞ்சியமாகும். இது சிறந்த ஊட்டச்சத்து விளைவுகளை செயல்படுத்த உதவுகின்றது.
இந்தத் திட்டமானது விவசாயம் உட்பட பல்வேறு துறைகளின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்பின் மூலம் நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரிடையே ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பெரும்பாலான சூழ்நிலைகளில், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பதற்கு முக்கியமான காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகும்.