பாரம்பரியப் பல்லுயிர்ப் பெருக்கத் தளம் – மகாராஷ்டிரா
April 6 , 2021 1719 days 965 0
மகாராஷ்டிர மாநில அரசானது சிந்துதுர்க் மாவட்டத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அம்போலி எனும் பகுதியைப் பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரியத் தளமாக அறிவித்து உள்ளது.
அரிதான நன்னீர் மீன் இனங்கள் இங்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
ஸ்கிஸ்துரா ஹிரண்யகேஷி (Schistura Hiranyakeshi) எனப் பெயரிடப்பட்ட ஒரு புதிய நன்னீர் மீன் இனத்தினைதேஜாஸ் தாக்கரே மற்றும் அவரது குழு கண்டுபிடித்துள்ளது.