TNPSC Thervupettagam

பாரம்பரிய மருத்துவம் குறித்த WHO உலகளாவிய உச்சி மாநாடு

December 22 , 2025 4 days 71 0
  • பாரம்பரிய மருத்துவம் குறித்த இரண்டாவது உலக சுகாதார அமைப்பின் (WHO) உலகளாவிய உச்சி மாநாடு இந்தியாவின் புது டெல்லியில் நடைபெறுகிறது.
  • இது WHO மற்றும் இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தால் இணைந்து நடத்தப் படுகிறது.
  • பாரம்பரிய மருத்துவம் மூலம் மக்களுக்கும் கிரகத்திற்கும் சமநிலையை மீட்டெடுக்க ஓர் உலகளாவிய இயக்கத்தை முன்னெடுப்பதை இந்த உச்சி மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நிகழ்வு "Restoring balance: The science and practice of health and well-being" என்ற கருத்துருவின் கீழ் நடத்தப்படுகிறது.
  • WHO அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ உத்தி 2025–2034 என்ற உத்தியின் மூலம் வழி நடத்தப்படும் இது, பாரம்பரிய மருத்துவத்தைச் சுகாதார அமைப்புகளில் பாதுகாப்பான முறையில், ஆதார அடிப்படையில் மற்றும் நிலையான வகையில் ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துகிறது.
  • இந்த உச்சி மாநாட்டில் 1.5 மில்லியன் அறிவியல் அறிக்கை வெளியீடுகள் மற்றும் வளங்களைக் கொண்ட டிஜிட்டல் களஞ்சியமான WHO பாரம்பரிய மருத்துவ உலகளாவிய நூலகம் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்